எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில்...
இந்த தொடர் முழுவதும் ஐதராபாத் அணி எதிரணிகளை திக்குமுக்காடச்செய்து, அதிக ரன்களை அடித்து அபாரமாக விளையாடி வருகிறது. பெங்களூருவுடன் விளையாடிய கடந்த போட்டியில் ஐதராபாத் அணி 287 ரன்களை குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
பிளெசிஸ் அதிரடி...
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதேபோல விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர். 3 பவுண்டர்கள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டு பிளெசிஸ், 4-வது ஓவரின் கடைசி பந்தில் நடராஜன் வேகத்தில் கேட்ச் கொடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.
கோலி அரைசதம்...
விக் ஜாக்ஸும் 6 ரன்களில் வெளியேற, விராட் கோலி – ரஜத் பட்டிதார் ஜோடி அதிரடி காட்ட தொடங்கியது. 11ஆவது ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் அடித்து 26 ரன்கள் எடுத்து அபாரமாக 50 ரன்களை கடந்தார். ஆனால் அடுத்த பந்திலேயே உனத்கட் வேகத்தில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து விராட் கோலி – க்ரீன் ஜோடி பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்த விராட் கோலி, 51 ரன்களில் உனட்கட் பவுலிங்கில் ஆட்டமிழக்க, பிறகு வந்த லோமரோர் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
207 ரன்கள் இலக்கு...
அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார் என்ற ரசிகர்களின் ஆசையை அவர் ஏமாற்றி 11 ரன்களில் வெளியேற, கடைசியாக க்ரீன் மற்றும் ஸ்வப்னில் சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது.
6 விக்கெட்களை...
அந்த அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் ஹெட்டை 1 ரன்னில் வெளியேற்றினார் வில் ஜேக்ஸ். 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். மார்க்ரம் மற்றும் கிளாசனை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஸ்வப்னில் சிங். தொடர்ந்து நிதிஷ் ரெட்டி, அப்துல் சமாத் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர். 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தது ஐதராபாத்.
தொடர் தோல்வி...
கேப்டன் கம்மின்ஸ் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது ஐதராபாத். அதன் மூலம் ஆர்சிபி வெற்றி பெற்றது. அந்த அணி இதற்கு முன்பாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி பவுலர்கள் ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சிவகாசி, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
வரும் 12-ம் தேதி 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 May 2024சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
மர்மமாக உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போனை தீவிரமாக தேடும் காவலர்கள்
09 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.
-
பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்
09 May 2024அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார ஆலோசகர் உயிரிழப்பு
09 May 2024பியாங்கியாங், வடகொரியாவில் கோயபல்ஸ் என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
09 May 2024சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.
-
2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்
09 May 2024புதுடெல்லி, 2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி
09 May 2024வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார்.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சென்னை, தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி தகவல்
09 May 2024புதுடில்லி, 'இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்த
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
09 May 2024சென்னை, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செப். 17 முதல் அக். 16 வரை இலங்கையில் அதிபர் தேர்தல்
09 May 2024கொழும்பு, இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
ம.பி.யில் தீயில் எரிந்த இ.வி.எம்: நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
09 May 2024போபால், மத்திய பிரதேசத்தில் தீயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்ததை அடுத்து பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
-
டெல்லியில் இருந்து ஹஜ் புனித யாத்திரை தொடங்கிய பயணிகள்
09 May 2024புது டெல்லி, டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
-
இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷ்யா குற்றச்சாட்டு
09 May 2024மாஸ்கோ, இந்தியாவின் உள்விவகாரங்கள் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.