எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட், பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
2013-ல் அறிமுகம்...
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.
மனுக்கள் தாக்கல்...
இந்தச் சூழலில் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. கடந்த 18-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (ஏப்.26) அளிக்கப்பட்டது.
கோரிக்கை நிராகரிப்பு...
தீர்ப்பின் போது, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
மேலும் அதிகரிக்க....
எனவே, மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலாம். பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1) இ.வி.எம்., விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம்.
2 இ.வி.எம். மற்றும் விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.
3) தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
4) தேர்தல் முடிவுகளை அறிவித்த பின் 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்.
5) முடிவுகளை அறிவித்த பின் வாக்குபதிவில் குளறுபடி என்றுக் கூறி வேட்பாளர்கள் யாராவது இயந்திரத்தை சரி பார்க்க விரும்பினால் அவர்களிடம் தேர்தல் ஆணையம் கட்டணம் வாங்கிக்கொண்டு சோதனை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணத்தை திருப்பி தர வேண்டும்.
6) தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் இ.வி.எம்.ல் உள்ள மைக்ரோ கண்ட்ரோலாரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
7) ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
8) இ.வி.எம்.ல் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 1 min ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
அனிமேஷனில் டோனியின் முகம்?
08 May 2024இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிய
-
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தனது நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
08 May 2024புதுடெல்லி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தனது நடன வீடியோ பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார்.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
08 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
-
டி-20-யில் 350 வீக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்: யுஸ்வேந்திர சாஹல் சாதனை
08 May 2024டெல்லி டி20 கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
ஆசிரியர்கள் நியமனம் ரத்து தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
08 May 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
-
வழக்கில் கடவுள் ஆஞ்சநேயரை கடவுளை மனுதாரராக சேர்த்தவருக்கு அபராதம் விதித்தது டெல்லி ஐகோர்ட்
08 May 2024புதுடெல்லி, தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில், கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.