முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வடைகறி

Cooking time in minutes: 
20
Ingredients: 

வடைகறி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பட்டை - 1.
  2. கிராம்பு - 2.
  3. சோம்பு -  1 டீஸ்பூன்.
  4. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன். 
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு.
  6. பூண்டு - 4 பல்.
  7. பச்சை மிளகாய் - 3 .
  8. 4 மிளகாய் வத்தல் - 4.
  9. பொடியாக நறுக்கிய தேங்காய் - 1.
  10. கடலை பருப்பு  - 1/4 கிலோ.
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு.
  13. கிராம்பு 1.
  14. சோம்பு - 1 சிட்டிகை .
  15. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4.
  16. பொடியாக நறுக்கிய தக்காளி - 3. 
  17. பொடியாக நறுக்கிய புதினா,மல்லி -  சிறிதளவு.
  18. மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.
  19. மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்.
  20. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன். 
Method: 
செய்முறை ;
  1. மிக்சி ஜாரில் ஒரு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, பூண்டு 4 பல்,3 பச்சை மிளகாய், 4 மிளகாய் வத்தல் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு  தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி 2 கப் தேங்காய்பாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்து சுத்தம் செய்த 1/4 கிலோ கடலை பருப்பை  போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பை  போடவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி,புதினா,தேவையான அளவு உப்பு மற்றும் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பக்கோடா பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பக்கோடாமாவை எண்ணெயில் போட்டு பொறித்து பக்கோடாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு  கிராம், ஒரு சிட்டிகை சோம்பு, பொடியா நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை  போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன் இதோட பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு  பட்டை, ஒரு சிட்டிகை சோம்பு, பொடியா நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை  போட்டு நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  11. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு நன்றாக வதக்கி தயார் செய்து வைத்துள்ள ஒரு கப் தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  12. தேங்காய் பால் கெட்டியாக வந்த பின்னர் மேலும் ஒரு கப் தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  13. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள பக்கோடாவை உடைத்து போட்டு கலந்து விடவும்.
  14. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  15. சுவையான வடைகறி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்