முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வெளியேற்றியது பெங்களூரு

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      விளையாட்டு
Bengaluru 2024-05-10

Source: provided

தர்மசாலா : ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. இதன்மூலம் பஞ்சாப்பை 2-வது  வெளியேற்றியது பெங்களூரு.

அதிகபட்சமாக...

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களும், ரஜத் படிதார் 55 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பேர்ஸ்டோவ்...

இதனையடுத்து 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஆனால் மறுபுறம் பேர்ஸ்டோவ் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங்க் சிங் 37 ரன்களில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

2-வது அணியாக....

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் டக் அவுட்டிலும், கேப்டன் சாம் கர்ரண் 22 ரன்களிலும், அசுதோஷ் சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். வெறும் 17 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ரோசோவ் 61 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 12 போட்டிகளில் விளையாடி 8-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்சை தொடர்ந்து நடப்பு தொடரில் 2-வது அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பின் சாம் கர்ரண் பேட்டி...

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பேசுகையில், " ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது விரக்தியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. இந்த போட்டியிலும் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் நடந்தன. ஆனால் வெற்றிபெறும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. அதுவும் தேவையான நேரத்தில் வெல்ல முடியவில்லை. பஞ்சாப் அணி சிறந்த அணியாக உள்ளது. அதனால் எனது அணியை வழிநடத்துவது நம்பிக்கையாகவும் இருந்தது.

கூடுதல் பலத்துடன்...

நிச்சயம் அடுத்த சீசனில் கூடுதல் பலத்துடன் வர வேண்டும். நிச்சயம் பஞ்சாப் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இன்னும் சில போட்டிகளை வென்றிருந்தால், மகிழ்ந்திருப்பேன். இந்த சீசனில் சில போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். சேசிங்கில் வரலாறு படைத்தோம். ஐ.பி.எல். தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. பஞ்சாப் அணியின் ஓய்வறையில் ஏராளமான அனுபவங்கள் உள்ளன. அதன் வாயிலாக கற்க வேண்டும். ஏமாற்றங்கள் இருந்தாலும், தொடர்ந்து போராட வேண்டும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து