எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
திகார் சிறையில்...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டிடம் மே 7-ம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் அலுவலக பணியில் ஈடுபடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். அவர் அரசு கோப்புகள் எதிலும் கையெழுத்திட மாட்டார் என அவரது வக்கீல் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
விடுவிக்க முடியுமா?
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை எல்லாம் ஜாமீனில் விடுவிக்க முடியுமா? ஒரு விவசாயிக்குகூட அறுவடை, விதை விதைப்பு போன்ற முக்கிய பணிகள் உள்ளன. விவசாயியைவிட அரசியல்வாதி மேலானவரா?” என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் கேள்வி எழுப்பினார்.
சிறப்பு காரணங்கள்...
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இது அரசியல்வாதியின் வழக்கா, சாதாரண நபர் வழக்கா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. விலக்குக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. தேர்தல் நடைபெறுவதால்தான் இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, “அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது மே 10-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என்றார்.
உரிமை அல்ல...
அதன்பின்னர், அமலாக்கத் துறை சார்பில் வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கெஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், “தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.
போட்டி இல்லை...
நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது” என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்தப் பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு...
முன்னதாக இந்தியாவில் தேர்தல் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இந்த வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டது. இதற்கு, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரும் 25-ம் தேதி....
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் தெரிவிக்கையில்., இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 25-ம் தேதி டெல்லியில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகள் என்னென்ன:-
1) கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.
2) சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கருத்து கூறக்கூடாது.
3) இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்.
4) அலுவலகம் சார்ந்த கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்5 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 2 days ago |
-
சிறுமி காணாமல் போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
20 May 2024மதுரை : 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம் : பயணிகள் பெரும் தவிப்பு
20 May 2024நாகர்கோவில் : சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
-
ஆருத்ரா பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குநர் ஒருவர் கைது
20 May 2024சென்னை : ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தினம் முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
20 May 2024சென்னை, அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருவள்ளூர் அருகே சோகம்: மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி
20 May 2024திருவள்ளூர் : திருவள்ளூர், பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை கடும் உயர்வு
20 May 2024கோவை : மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
20 May 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம்
20 May 2024சென்னை, பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-
3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்
20 May 2024சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.
-
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் : மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
20 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
-
பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
20 May 2024புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
பகலறியான். இசை வெளியீடு
20 May 2024ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த
-
கனமழையால் படகு போக்குவரத்து நிறுத்தம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
20 May 2024குமரி, கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சம் தொட்டது: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது : வெள்ளி விலையும் கடும் உயர்வு - பெண்கள், நகை பிரியர்கள் அதிர்ச்சி
20 May 2024சென்னை : தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்ததால் பெண்கள் - நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச்செயலர் ஆலோசனை
20 May 2024சென்னை : தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செய
-
தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் இனி ஒரே வலைதளத்தில் பெற முடியும்
20 May 2024சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் மரணம்: துணை அதிபர் உடனடியாக ஈரான் புதிய அதிபராக தேர்வு
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது முக்பர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
4-வது மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவம்: ஐடி ஊழியரின் மனைவி தற்கொலை : கோவை அருகே பரிதாபம்
20 May 2024சென்னை : பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
-
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ளுறை பயிற்சிக்கான அனுமதி: மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு
20 May 2024சென்னை, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தின் 38 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை மேலும் இரு ஆண்டு காலத்துக்கு