எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
____________________________________________
சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி
ஐதராபாத் அணிக்கு எதினான போட்டியில் மும்பை வெற்றிப்பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இதை நான் நீண்ட நேரம் கழித்து செய்கிறேன். 14 டிசம்பருக்குப் பின் இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் பேட்டிங் செய்தேன். அதனால் கொஞ்சம் சோர்வு இருந்தது. மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை. அந்த நேரத்தில் நான் மும்பை அணிக்கு தேவைப்பட்டேன் என்று கருதினேன்.
குறிப்பாக கடைசி வரை ஒருவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் சென்று விளையாடினேன். களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அது மும்பை ஸ்கூலின் கலையாகும். வான்கடே மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். பந்து சீம் செய்வதை நிறுத்தியதும் நான் என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் அடித்தேன். அதை நான் பயிற்சியில் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________________________________________
2 முக்கிய இந்திய வீரர்கள்
டி-20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய வீரர்களாக செயல்படுவார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த தொடரில் 2 ஜென்டில்மேன்களை நீங்கள் பார்க்க வேண்டும். இருவருமே இடதுகை வீரர்கள். இருவருமே முதல் உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர். ஒருவர் ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடிய அவர் டாப் ஆர்டரில் பயமின்றி தம்முடைய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர்.ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஷிவம் துபேவை கண்டிப்பாக பாருங்கள். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர். வேடிக்கைக்காக சிக்சர்களை அடிக்கக்கூடிய இவர் ஸ்பின்னர்களை பந்தாடுவார்.
அவர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதாங்களுக்கு வெளியே பந்தை அடிக்கக்கூடியவர். மிகவும் பெரியதாக நீண்ட தூரத்தில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய அவர் சுழல் பந்துகளை தெறிக்க விடுபவர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தில் வேலை செய்துள்ள அவர் 5, 6-வது இடத்தில் வெற்றிக்கான சாவியை பிடிக்கக்கூடியவர். ஒருவர் 20 - 25 பந்துகளில் போட்டியை மாற்றுவதற்கு தேவைப்பட்டால் அவர் தான் உங்களுடைய வீரர்.அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலான சமயங்களில் 200-ஐ தொடும். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் 190, 200 ரன்களை அடித்து இந்தியா முன்னோக்கி செல்வதற்கு அவர் உதவுவார். எனவே இந்த இடது கை வீரரின் ஆட்டத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
____________________________________________
ரோகித்திற்கு யுவராஜ் புகழாரம்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனவும், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவைப்படுவதாக நினைக்கிறேன். ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் அவர். அவரால் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுத் தர முடியும் என்றார்.
____________________________________________
கோவிலில் கொல்கத்தா வீரர்கள்
வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி, லக்னோ சூப்பர் கெயிண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பிற்பகலில் கொல்கத்தாவுக்கு தனி விமானம் மூலம் வீரர்கள் புறப்பட்டனர்.
ஆனால், கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு குவாஹத்தி விமான நிலையத்துக்கு திருப்பிவிட்டனர். குவாஹத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த கொல்கத்தா அணி வீரர்கள் சென்ற விமானம் மீண்டும் நள்ளிரவில் கொல்கத்தா சென்று தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு லக்னோ விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லக்னோவுக்கு மீண்டும் சென்ற வீரர்கள், வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். கொல்கத்தா அணி வீரர்கள் வாரணாசியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
____________________________________________
ஒலிபிக் போட்டிக்கு தகுதி
பஹாமாஸில் நடைபெறும் உலக தடகள ரிலே போட்டிகளில் 4*400 மீட்டர் ரிலேவில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கள் பிரிவுகளில் 2-ஆம் இடம் பிடித்து, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு திங்கள்கிழமை தகுதிபெற்று அசத்தின. இந்திய ஆடவர் அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், மகளிர் அணி ஆச்சர்யமளிக்கும் வகையில் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதில் ஆடவர் அணிகளுக்கான 2-ஆவது சுற்று ஹீட்ஸில், முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிஷம் 3.23 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தது.
அதேபோல், மகளிர் அணிகளுக்கான 2-ஆவது சுற்று ஹீட்ஸிலும், ரூபல் சௌதரி, எம்.ஆர். பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி, 3 நிமிஷம் 29.35 விநாடிகளில் 2-ஆவதாக இலக்கை எட்டினர். ஜமைக்க அணி 3 நிமிஷம் 28.54 விநாடிகளில் முதலாவதாக வந்தது. 2-ஆவது சுற்றின் 3 ஹீட்ஸ்களில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், இந்தியாவின் இருபால் அணிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
19 May 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீரா